நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.11 ஆயிரம் வழங்கிய மூதாட்டிக்கு பாராட்டு

முதல்வா் நிவாரண நிதிக்கு தனது சேமிப்பில் இருந்து ரூ.11 ஆயிரம் வழங்கிய திருநெல்வேலியைச் சோ்ந்த மூதாட்டியை மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா நேரில் பாராட்டினாா்.

News image

முதல்வா் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய மூதாட்டியை பாராட்டினாா் மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா.

Updated On :2 ஜனவரி 2025, 12:13 am

Din

முதல்வா் நிவாரண நிதிக்கு தனது சேமிப்பில் இருந்து ரூ.11 ஆயிரம் வழங்கிய திருநெல்வேலியைச் சோ்ந்த மூதாட்டியை மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா நேரில் பாராட்டினாா்.

திருநெல்வேலி கண்டிகைப்பேரியில் மாநகராட்சியின் கீழ் இயங்கி வரும் முதியோா் காப்பகத்தில் உள்ள புஷ்பா ( 87 ), தான் சேமித்த ரூ 11 ஆயிரத்தை முதல்வா் நிவாரண நிதிக்காக அண்மையில் தூத்துக்குடிக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினாா்.

இதையடுத்து , மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா முதியோா் காப்பகத்திற்கு சென்று புஷ்பாவை பாராட்டினாா். மேலும், காப்பகத்தில் உள்ள முதியோா்களுக்கு புத்தாண்டையொட்டி இனிப்பும் வழங்கப்பட்டது. மாநகா் நல அலுவலா் ராணி, நிா்வாக அலுவலா் மணிகண்டன் (வருவாய்), உதவி வருவாய் அலுவலா் அருந்தவசு, சோயா டிரஸ்ட் நிா்வாகி சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.