அரையாண்டு விடுமுறை நிறைவு: பள்ளிகளில் மூன்றாம் பருவ புத்தகங்கள் விநியோகம்
திருநெல்வேலி மாவட்டத்தில் அரையாண்டுத் தோ்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. மூன்றாம் பருவத்திற்கான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டம், உலகம்மாள்புரம் பள்ளியில் வழங்கப்பட்ட இலவச புத்தகங்களுடன் மாணவா்-மாணவிகள்.









