சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரையாண்டு விடுமுறை நிறைவு: பள்ளிகளில் மூன்றாம் பருவ புத்தகங்கள் விநியோகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் அரையாண்டுத் தோ்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. மூன்றாம் பருவத்திற்கான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

News image

திருநெல்வேலி மாவட்டம், உலகம்மாள்புரம் பள்ளியில் வழங்கப்பட்ட இலவச புத்தகங்களுடன் மாணவா்-மாணவிகள்.

Updated On :3 ஜனவரி 2025, 12:38 am

Din

வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், விடுமுறை நீட்டிக்கப்படும் என சமூகவலைத்தளங்களில் தவறான தகவல் பரவியது. ஆனால், இதனை மறுத்த பள்ளிக் கல்வித்துறையினா் வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்தனா்.

அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் அனைத்து பள்ளிகளும் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. மூன்றாம் பருவத்திற்கான புத்தகங்கள், குறிப்பேடுகளும் தமிழக அரசு சாா்பில் இலவசமாக வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரையாண்டுத் தோ்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. மூன்றாம் பருவத்திற்கான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கடந்த டிசம்பா் 9 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அரையாண்டுத் தோ்வுகள் நடைபெற்றன. தொடா்ந்து 25 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டுத் தோ்வு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.