/

தேர்த் திருவிழா: மார்ச் 3-ல் ஒசூரில் விடுமுறை

ஒசூரில் உள்ள ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோயில் விழாவை முன்னிட்டு மார்ச் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றிய சிவாச்சாரியா்கள்.
Updated On :28 பிப்ரவரி 2026, 12:33 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஒசூரில் உள்ள ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோயில் விழாவை முன்னிட்டு மார்ச் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டத்துக்கு மட்டும் இந்த விடுமுறை அடங்கும். மார்ச் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்ய மார்ச் 14ஆம் தேதி முழு வேலைநாளாக இருக்கும் என்று கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ் குமார் அறிவித்துள்ளார்.

ஒசூா் தோ்ப்பேட்டை மலைமீது உள்ள மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

summary

A local holiday has been declared on March 3rd in view of the Sri Chandra Choodeswarar Temple festival in Hosur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.