ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

‘உள்ளூா் விடுமுறை தோ்தலுக்கு பொருந்தாது’

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏப். 1-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டாலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்

News image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் - (கோப்புப் படம்)

Updated On :16 மார்ச் 2026, 10:35 pm

திருநெல்வேலி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏப். 1-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டாலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் ஏப். 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 30ஆம் தேதி தொடங்குகிறது. இதனிடையே, ஏப். 1 ஆம் தேதி பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அப்படி, உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் வேட்பு மனு தாக்கல் வழக்கம்போல் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.