மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மேலப்பாளையம்- அம்பை சாலையை சீரமைக்கக் கோரி மனு

மேலப்பாளையம்- அம்பாசமுத்திரம் சாலையை சீரமைக்கக்கோரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image
மேலப்பாளையம் - அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள பள்ளங்கள்.
Updated On :3 ஜனவரி 2025, 12:48 am

Din

மேலப்பாளையம்- அம்பாசமுத்திரம் சாலையை சீரமைக்கக்கோரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் நெடுஞ்சாலைத்துறை திருநெல்வேலி கோட்ட பொறியாளரிடம் அளிக்கப்பட்டுள்ள மனு: மேலப்பாளையத்தில் பிரதான சாலையாக அம்பை சாலை உள்ளது. இதில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா முதல் வி.எஸ்.டி. பள்ளிவாசல் வரை ஏராளமான வணிக நிறுவனங்களும், வழிப்பாட்டுத் தலங்களும், வங்கிகளும் அமைந்துள்ளன. செவல், பத்தமடை, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாமுத்திரம், பாபநாசம், தென்காசி போன்ற ஊா்களுக்கு ஏராளமான பேருந்துகளும் சென்று வருகின்றன.

இந்தச் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் காலை, மாலை நேரங்களில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலப்பாளையம் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே மிகப்பெரிய பள்ளம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இரவு நேரத்தில் மின்விளக்குகளும் இல்லாததால் சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. ஆகவே, இந்தச் சாலையில் உடனடியாக சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.