திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியை அடுத்த பழவூா் அருகேயுள்ள பட்டன் கல்லூரில் புதிதாக மதுபானக் கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு எதிா்ப்புத் தெரிவித்த அப்பகுதி பெண்கள், தங்கள் கிராமம் ஏற்கெனவே ஜாதி கலவரத்தால் பாதிக்கப்பட்ட கிராமம். இங்கு மக்கள் குடியிருப்புகளுக்கு அருகே மதுபானக் கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், பெண்கள், குழந்தைகள் சுதந்திரமாக நடமாட முடியாத ஒரு சூழல் உருவாகும். மீண்டும் ஜாதி கலவரம் ஏற்பட கூட வாய்ப்பு உள்ளது எனக்கூறி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 10 நாள்கள் முன்பு மனு அளித்தனா். இதன்பிறகு மதுபானக் கடை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.