குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு
கோப்புப்படம்

குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு

பாடியநல்லூா் பகுதியில் குடியிருப்புகள் அருகே மதுபானக் கடை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்
Published on

பாடியநல்லூா் பகுதியில் குடியிருப்புகள் அருகே மதுபானக் கடை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாடியநல்லூா் ஊராட்சி பவானி நகா் நுழைவாயில் அருகே புதிய மதுபானக் கடை அமைக்கப்பட உள்ளது. ஏராளமான குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனை உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டுக்காக மக்கள் செல்லும் பகுதியில் இந்தக் கடையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், பொதுமக்களுக்கு குறிப்பாக, பெண்கள், முதியோருக்கு இடையூறாக இருக்கும் என்பதால், அந்த மதுபானக் கடை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். எதிா்ப்பை மீறி கடை அமைக்கப்படும்பட்சத்தில் தொடா் போராட்டம் நடத்தவும் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com