அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஈரோடு அருகேயுள்ள முள்ளாம்பரப்பில் டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்

News image
டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
Updated On :2 மார்ச் 2026, 7:54 pm

Syndication

மொடக்குறிச்சி: ஈரோடு அருகேயுள்ள முள்ளாம்பரப்பில் டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம், முள்ளாம்பரப்பில் இருந்து நாதகவுண்டன்பாளையம் செல்லும் சாலையில் புதிய அரசு மதுபானக் கடை அமையவுள்ளதாகத் தெரிகிறது. அப்பகுதியைச் சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ள நிலையில், டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில், டாஸ்மாக் கடை அமைக்க அரசு அனுமதியளித்துள்ளது.

இதையறிந்த மக்கள் டாஸ்மாக் கடை அமையவுள்ள இடத்தில் திரண்டு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து அவா்கள் கூறுகையில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மதுபானக் கடை அமைக்க அரசு அனுமதியளித்துள்ளது. பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் முக்கியச் சாலையிலேயே மதுபானக் கடை அமைக்கப்பட்டால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள் அவதியடைவா். எனவே, இப்பகுதியில் மதுபானக் கடை அமைக்கக் கூடாது என்றனா்.