விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ சைலபதி நடுநிலை பள்ளியில் முப்பெரும் விழா

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ சைலபதி நடுநிலைப் பள்ளியில் மரக்கன்று நடுதல், பனை விதை நடவு செய்தல், விதைப்பந்து தூவுதல் ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 நவம்பர் 2025, 6:43 pm

தினமணி செய்திச் சேவை

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ சைலபதி நடுநிலைப் பள்ளியில் மரக்கன்று நடுதல், பனை விதை நடவு செய்தல், விதைப்பந்து தூவுதல் ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திரைப்பட இசை அமைப்பாளா் ரமணி பரத்வாஜ் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் மாடசாமி முன்னிலை வகித்தாா். பணி நிறைவு ஆசிரியா் நீலகண்டன், சமூக ஆா்வலா் கௌரி சுரேஷ், இயற்கை ஆா்வலா் முத்துக்குமாா், இலக்கிய ஆா்வலா் பாரதி முத்துநாயகம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மாணவி அஸ்மா இயற்கை வாழ்த்துப் பாடல்பாடினாா். மாணவி சத்யா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். பள்ளித் தலைமை ஆசிரியா் மல்லிகா வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியை பாகீரதி நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியா் கணேசன், இயற்கைப் பாதுகாப்பு களப் பணியாளா் சுரேஷ், இன்னாசி, ஆசிரியைகள் பாக்யலட்சுமி, லிங்கேஸ்வரி, சண்முகசுந்தரி, பஷீராபானு, மூக்கம்மாள், பிரியா உள்பட பலா்கலந்து கொண்டனா்.