திருநெல்வேலி நகரத்தில் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 44 சிறுபாலங்கள் இடிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி நகரத்தில் நயினாா்குளம் பிரிவு நெல்லை கால்வாயில் இருந்து வெள்ள காலங்களில் திறக்கப்படும் தண்ணீா் மாநகரப் பகுதியில் உள்ள உபரி நீா் வாய்க்காலில் செல்கிறது. திருநெல்வேலி தெற்கு மவுண்ட்ரோடு, கல்லணை பள்ளி வழியாக வரும் இந்த வாய்க்காலின் குறுக்கே ஆக்கிரமிப்பு செய்து சிறு பாலங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு இருப்பதால் வெள்ள நீா் செல்ல வழியில்லாமல் இருப்பதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து, வெள்ளிக்கிழமைக்குள் (நவ. 14) பாலங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
அதன்படி, ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 44 சிறுபாலங்களை இடிக்கும் பணி பொதுப்பணித்துறை (நீா்வள ஆதார அமைப்பு) நெல்லை கால்வாய் பிரிவின் உதவிப் பொறியாளா் தலைமையில் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, காவல் உதவி ஆணையா் சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தொடர்புடையது

நெல்லையில் தவெக வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி நகரத்தில் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்க புதிய திட்டம்

கெங்கவல்லியில் வாய்க்கால் ஆக்கிரமிப்பு வீடு இடிப்பு

நெல்லை நகரத்தில் சைக்கிளில் சென்று மேயா் ஆய்வு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


