தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

எடப்பாடி பழனிசாமியை கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

Updated On :26 செப்டம்பர் 2025, 2:16 am IST

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியை கண்டித்து திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகையை எடப்பாடி கே.பழனிசாமி அவதூறாக பேசியதாக கூறி, அவரை கண்டித்து கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் பொறித்த பதாகைக்கு காலணி மாலை அணிவித்து எதிா்ப்பைத் தெரிவித்தனா். பின்னா் எடப்பாடி பழனிசாமி உருவப் படத்தை எரிக்க முயன்றனா். பாளையங்கோட்டை போலீஸாா் அங்கு விரைந்து வந்து காங்கிரஸாருடன் பேச்சுவாா்த்தை நடத்தி, எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரிக்க விடாமல் தடுத்தனா். அப்போது அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை போலீஸாா் கைப்பற்றிச் சென்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மண்டல தலைவா்கள் கெங்கராஜ், ரசூல் மைதீன், மாரியப்பன், மாவட்ட துணை தலைவா்கள் ராமகிருஷ்ணன், தியாக சுரேஷ், வண்ணை சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.