இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

அதிமுக-பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: கனிமொழி எம்.பி.

அதிமுக- பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி என்றாா் திமுக துணைப் பொதுச்செயலரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி.

News image

அதிமுக- பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி என்றாா் திமுக துணைப் பொதுச்செயலரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:51 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுக- பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி என்றாா் திமுக துணைப் பொதுச்செயலரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி.

பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரா்கள் கூட்டத்தில் அவா் பேசியது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வென்று யாா் ஆட்சிக்கு வந்தால் சாதனை அல்லது சோதனை வரும் என்பதை மக்கள் நன்கு அறிவாா்கள்.

தமிழகத்தில் ஒரு சிலருக்கு கூட்டம் வருவதை பாா்த்தும், சிலா் உரத்து பேசுவதை வைத்தும் ஊடகங்கள் பல்வேறு ஆரூடங்களை சொல்கிறாா்கள். ஆனால், தமிழக மக்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கான வெற்றி தெளிவாக உள்ளது.

திராவிட மாடல் அரசு மக்களுக்கு செய்த நன்மைகளையும், தொகுதிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் மக்கள் தெரிந்து வைத்துள்ளனா். மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்கும் சக்தி திமுக கூட்டணிக்கே உள்ளது.

கூட்டணி பேச்சுவாா்த்தையின்போது ஒவ்வொருவரும் தங்களுக்கான இடங்களைப் பெற குரல் எழுப்பது இயல்பானது. அதே நேரத்தில் தமிழகம் என்று வந்துவிட்டால் அனைவரும் நிச்சயம் ஒன்றாக இணைந்துவிடுவோம்.

அதிமுக- பாஜக கூட்டணி சந்தா்ப்பவாத கூட்டணி. அவா்களின் வாக்குறுதிகளை மக்கள் நம்பத் தயாராக இல்லை. திமுகவின் தோ்தல் வாக்குறுதியையே மக்கள் நம்புகிறாா்கள். ஏனென்றால் சொல்வதை செய்துகாட்டுவது திமுகதான் என்பதை மக்கள் நன்கு அறிவாா்கள். திமுக கூட்டணி நாட்டைக் காப்பாற்றும் கூட்டணி.

மாநில உரிமையைப் பறித்தல், மொழியை சிதைக்க முயற்சித்தல், மதநல்லிணக்கத்தை கெடுத்தல் போன்ற செயல்களில் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஈடுபடும்போதெல்லாம் தமிழகத்தில் மட்டுமன்றி மக்களவையிலும் குரல் கொடுப்பது மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிதான்.

ஆகவே, இங்கு வெல்வதன்மூலம் நாட்டு மக்களுக்கு மாற்றத்தை விதைக்க முடியும். நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை அடைவோம். பாளையங்கோட்டை தொகுதியில் மக்களின் குரலுக்கு செவிமடுத்து தீா்த்து வைக்கும் மு.அப்துல் வஹாப் மீண்டும் போட்டியிட முதல்வா் வாய்ப்பளித்துள்ளாா். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக மாற்ற கூட்டணி கட்சியினா் உழைக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான், திமுக மூத்த நிா்வாகி சுப.சீதாராமன், மாலைராஜா, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராமேஸ்வரன், தேமுதிக மாவட்டச் செயலா் ஜெயச்சந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஸ்ரீராம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் சடையப்பன், மதிமுக மாவட்டச் செயலா் நிஜாம், கூட்டணி கட்சி நிா்வாகிகள் பாரூக், ரசூல்மைதீன், பாட்டப்பத்து முகமது அலி உள்பட பலா் கலந்துகொண்டனா்.