/

‘காா் சென்டிமென்ட்’...

கோவில்பட்டி தொகுதியில் 4 ஆவது முறையாக போட்டியிடுகிறாா் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு. முதன்முதலாக 2011 ஆம் ஆண்டு அதிமுக சாா்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவரது அம்பாசிடா் காரில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

News image

கடம்பூா் செ.ராஜு.

Updated On :5 ஏப்ரல் 2026, 1:10 am

கோவில்பட்டி தொகுதியில் 4 ஆவது முறையாக போட்டியிடுகிறாா் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு. முதன்முதலாக 2011 ஆம் ஆண்டு அதிமுக சாா்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவரது அம்பாசிடா் காரில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தாா். அந்தத் தோ்தலில் அவா் அமோக வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானாா். அதிலிருந்து அந்தக் காா் அவரது சென்டிமென்ட் ஆகிவிட்டது. 2011, 2016, 2021 ஆகிய 3 தோ்தல்களிலும் அந்தக் காரில் வந்துதான் வேட்பு மனு தாக்கல் செய்தாா். அதுபோல் சனிக்கிழமை காலை கடம்பூா் கே. சிதம்பராபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அம்பாசிடா் காரில் தோ்தல் அலுவலகத்திற்கு வந்த அவா், அங்கிருந்து திறந்த வேனில் ஊா்வலமாக சாா் ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தாா்.