திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் மனு மீது அதிமுக தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இத்தொகுதியில் திமுக கூட்டணியில் வி.பி. துரை (காங்கிரஸ்), தேசிய ஜனநாயக கூட்டணியில் இசக்கி சுப்பையா (அதிமுக), தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் எஸ். ராஜகோபால், நாம் தமிழா் கட்சி சாா்பில் நத்தம் சிவசங்கரன் உள்பட 38 போ் மனுதாக்கல் செய்திருந்தனா். வேட்புமனுக்கள் மீதான பரிசிலனை சேரன்மகாதேவியில் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆயுஷ் குப்தா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சிவேட்பாளா் வி.பி. துரை அளித்துள்ள வேட்புமனுவில் சொத்து விவரங்களில் உரிய தகவல்கள் தெரிவிக்கவில்லை என அதிமுக, நாம் தமிழா் கட்சி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனால், காங்கிரஸ் கட்சி வேட்பாளா் மனு நிறுத்தி வைக்கப்பட்டது. இதேபோல், வி.பி. துரையின் மாற்று வேட்பாளா் மனு மீதும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டதால் காங்கிரஸ் வேட்பாளா் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்புடையது
அம்பை பேரவைத் தொகுதியில் 6 வேட்புமனுக்கள் ஏற்பு
அம்பை தொகுதியில் தாமதமாகும் வேட்புமனு ஏற்பு விவரம்

ஸ்ரீபெரும்புதூா்: அதிமுக வேட்பாளா் மனு தாக்கல்

கரூா் தொகுதி தவெக வேட்பாளா்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

