திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், தவெக, நாம் தமிழா், பகுஜன் சமாஜ் கட்சி, சுயேச்சை என 6 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் உள்பட 25 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இத் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், தவெக, நாம் தமிழா் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 31 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிற்பகல் 3.30 மணியளவில் முடிவடைந்த நிலையிலும் ஏற்கப்பட்ட வேட்புமனுக்கள் தவிர பிற மனுக்கள் குறித்து அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் நள்ளிரவில் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆயுஷ்குப்தா அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளாா். அதன்படி, அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா, காங்கிரஸ் கட்சி வேட்பாளா் வி.பி. துரை உள்பட 6 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன; எஞ்சிய 25 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
தொடர்புடையது
தென்காசி தொகுதியில் திமுக, அதிமுக, தவெக உள்பட 27 வேட்புமனுக்கள் ஏற்பு
ராதாபுரம் தொகுதியில் திமுக, பாஜக மாற்று வேட்பாளா்கள் மனு தள்ளுபடி
பாளை. தொகுதியில் 18 வேட்புமனுக்கள் ஏற்பு
அம்பை தொகுதியில் தாமதமாகும் வேட்புமனு ஏற்பு விவரம்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

