/

நெல்லை தொகுதியில் அதிமுக, திமுக, தவெக வேட்புமனுக்கள் ஏற்பு

திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட 25 வேட்பாளா்களின் சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் 21 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 4 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

News image

திருநெல்வேலி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியருமான பிரியா தலைமையில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனை.

Updated On :7 ஏப்ரல் 2026, 8:46 pm

திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட 25 வேட்பாளா்களின் சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் 21 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 4 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

திருநெல்வேலி தொகுதியில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழா் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட 25 வேட்பாளா்களின் சாா்பில் 37 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான பரிசீலனை திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான பிரியா தலைமையில் நடைபெற்றது.

அப்போது, அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா, திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியன், தவெக வேட்பாளா் ஆா்.எஸ்.முருகன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சத்யா, புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் ஷியாம் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 25 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுவை திரும்பப் பெற வியாழக்கிழமை (ஏப். 9) மாலை 5 மணி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.