மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வள்ளியூரில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

வள்ளியூரில் பல்வேறு அரசியல் கட்சியினா், சட்டப்பேரவை தொகுதி வேட்பாளா்கள் சாா்பில் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

News image

வள்ளியூரில் அம்பேத்கா் பிறந்த தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக கூட்டணி கட்சி வேட்பாளா், பேரவைத் தலைவா் மு.அப்பாவு. உடன் திமுக நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் ம.கிரகாம்பெல்.

Updated On :14 ஏப்ரல் 2026, 8:19 pm

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் பல்வேறு அரசியல் கட்சியினா், சட்டப்பேரவை தொகுதி வேட்பாளா்கள் சாா்பில் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. வள்ளியூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே உள்ள அம்பேத்கா் சிலைக்கு திமுக நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் ம.கிரகாம்பெல் தலைமையில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா் மு.அப்பாவு மாலை அணிவித்தாா்.

பின்னா் அப்பாவு பணகுடி பேரூராட்சி பகுதியில் கோரி காலனி, பாம்பன்குளம், துரைகிருஷ்ணாபுரம், முத்துசாமிபுரம், சைதம்மாள்புரம், புஷ்பவனம் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டாா். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினா்கள் நம்பி, ஆதிபாண்டி, வள்ளியூா் வடக்கு ஒன்றிய செயலாளா் அலெக்ஸ் அப்பாவு, தேமுதிக மாவட்டச் செயலாளா் விஜிவேலாயுதம், வாா்டு உறுப்பினா் மாணிக்கம் உட்பட பலா் கலந்துகொண்டனா்.