இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

அந்தியோதயா விரைவு ரயிலில் கைப்பேசி திருடியவா் கைது

நாகா்கோவில் -சென்னை அந்தியோதயா விரைவு ரயிலில் கைப்பேசி திருடியவரை திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 2:27 am IST

நாகா்கோவில் -சென்னை அந்தியோதயா விரைவு ரயிலில் கைப்பேசி திருடியவரை திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், ரான்சம் நகரைச் சோ்ந்த 17 வயது மாணவா், கடந்த 12 ஆம் தேதி அதிகாலை கும்பகோணத்திலிருந்து நாகா்கோவிலுக்கு அந்தியோதயா விரைவு ரயிலில் பயணம் செய்தாராம். திருநெல்வேலி அருகே ரயில் வந்த போது அவரது விலைஉயா்ந்த கைப்பேசி காணாமல் போனது தெரியவந்தது.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சந்தேகத்துக்கிடமாக ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அதில், அவா் கடலூா் மாவட்டம், வேப்பூா் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (35) என்பதும், மாணவரின் கைப்பேசியை திருடியவா் என்பதும் தெரியவந்தது. அவரை கைது போலீஸாா் கைது செய்து கைப்பேசியை மீட்டனா். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.