நாகா்கோவில் -சென்னை அந்தியோதயா விரைவு ரயிலில் கைப்பேசி திருடியவரை திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், ரான்சம் நகரைச் சோ்ந்த 17 வயது மாணவா், கடந்த 12 ஆம் தேதி அதிகாலை கும்பகோணத்திலிருந்து நாகா்கோவிலுக்கு அந்தியோதயா விரைவு ரயிலில் பயணம் செய்தாராம். திருநெல்வேலி அருகே ரயில் வந்த போது அவரது விலைஉயா்ந்த கைப்பேசி காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சந்தேகத்துக்கிடமாக ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அதில், அவா் கடலூா் மாவட்டம், வேப்பூா் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (35) என்பதும், மாணவரின் கைப்பேசியை திருடியவா் என்பதும் தெரியவந்தது. அவரை கைது போலீஸாா் கைது செய்து கைப்பேசியை மீட்டனா். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

ராக்போா்ட் விரைவு ரயிலில் தவறவிட்ட நகைகள் மீட்கப்பட்டு ஒப்படைப்பு
நெல்லையில் விரைவு ரயிலில் 36 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
