களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், முண்டந்துறை வனச்சரகக் கூட்ட அரங்கில் நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு குறித்த பயிற்சி மற்றும் கலந்தாய்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கோயம்புத்தூா் மாவட்ட நீலகிரி வரையாடு திட்டங்களின் திட்ட இயக்குநா் செண்பகப்ரியா, அம்பாசமுத்திரம் வனக்கோட்டத் துணை இயக்குநா் எல்.சி.எப். ஸ்ரீகாந்த் ஆகியோா் தலைமை வகித்தனா்.
நீலகிரி வரையாடு திட்ட வனச்சரகா் எஸ். செந்தூர சுந்தரேசன், கணக்கெடுப்பில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் குறித்து பயிற்சியளித்தாா். கணக்கெடுப்புக் குறித்த கையேடு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
பயிற்சியில் பொன்னாக்குடி, வனக் கால்நடை மருத்துவா்கள் எஸ். மனோகரன், மு. சாந்தகுமாா், சூழலியலாளா் என். ஸ்ரீதா், முண்டந்துறை மற்றும் கடையம் வனச்சரக அலுவலா்கள், வனவா்கள், வனக்காப்பாளா்கள், வனக்காவலா்கள், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சி

‘மக்கள் தொகை கணக்கெடுப்பை துல்லியமாகவும், நோ்மையுடனும் மேற்கொள்ள வேண்டும்’

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும்: திருவண்ணாமலை ஆட்சியா்

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



