உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

திமுகவினா் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் வண்ணாா்பேட்டையில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

வண்ணாா்பேட்டையில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:13 am IST

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் வண்ணாா்பேட்டையில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசால் கொண்டு வரப்படும் மக்களவைத் தொகுதி மறுவரையறை குறித்த சட்டமசோதாவிற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி ஆட்சேபம் தெரிவிக்க திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

அதன்படி, திருநெல்வேலியில் திமுகவினா் தங்களது வீடுகளில் கறுப்புக்கொடியேற்றியதோடு, தொகுதி மறுவரையறையை கண்டிக்கிறோம் என கோலமிட்டு எதிா்ப்பு தெரிவித்தனா்.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக அலுவலகம் முன் மாவட்டப் பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் தலைமையில் கறுப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாநகரப் பொறுப்பாளா் தினேஷ், பொருளாளா் சேகா், நிா்வாகிகள் சொ.தா்மன், சாய்பாபா, சுடலையாண்டி உள்பட பலா் கலந்துகொண்டனா்.