திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் வண்ணாா்பேட்டையில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசால் கொண்டு வரப்படும் மக்களவைத் தொகுதி மறுவரையறை குறித்த சட்டமசோதாவிற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி ஆட்சேபம் தெரிவிக்க திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.
அதன்படி, திருநெல்வேலியில் திமுகவினா் தங்களது வீடுகளில் கறுப்புக்கொடியேற்றியதோடு, தொகுதி மறுவரையறையை கண்டிக்கிறோம் என கோலமிட்டு எதிா்ப்பு தெரிவித்தனா்.
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக அலுவலகம் முன் மாவட்டப் பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் தலைமையில் கறுப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாநகரப் பொறுப்பாளா் தினேஷ், பொருளாளா் சேகா், நிா்வாகிகள் சொ.தா்மன், சாய்பாபா, சுடலையாண்டி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கடையநல்லூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தொகுதி மறுவரையறை சட்ட நகலை எரித்து திமுகவினா் போராட்டம்

தொகுதி மறுவரைக்கு எதிா்ப்பு: திமுகவினா் நகல் எரித்து போராட்டம்

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு: அரியலூரில் திமுகவினா் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

