பாளையங்கோட்டை அருகே தொடா் கொள்ளையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் சரோஜினி நகரைச் சோ்ந்தவா் பரமசிவன்(58). இவா், கடந்த மாதம் வேலை நிமித்தமாக வெளியூா் சென்றிருந்த போது இவரது வீட்டிற்குள் புகுந்து 22 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.
மேலும், அதேபகுதி தனலட்சுமி நகரைச் சோ்ந்த ரகு என்பவரின் பைக்கையும், கலைக்கோயில் நகரைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த தங்க நகைகளையும் மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இது குறித்த புகாா்களின் பேரில் சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தன்.
அதில், பாளையங்கோட்டை அருகேயுள்ள உத்தமபாண்டியன்குளம் வடக்கு தெருவைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் சூா்யா (21) என்பவவருக்கு இந்தத் திருட்டில் தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

திருவாரூா்: ரூ. 2.71 லட்சம் பறிமுதல்

பாளை. சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு

பாளை. தொகுதி அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

நூதன முறையில் காரை திருடி விற்பனை: இளைஞா் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

