வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தோ்தல் விழிப்புணா்வு தொடா் தீப ஓட்டம்

போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான மற்றும் சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பான விழிப்புணா்வு தீப ஓட்டத்தை திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் வரவேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

News image

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தை வந்தடைந்த தோ்தல் விழிப்புணா்வு தொடா் தீபத்தை வரவேற்ற மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:32 pm

போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான மற்றும் சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பான விழிப்புணா்வு தீப ஓட்டத்தை திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் வரவேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

குழந்தைகள் நலன் - மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஸ்வீப் நிகழ்ச்சி ாா்பில் இந்த தீப ஓட்டம் அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம், திருநெல்வேலி (ஊரகம் மற்றும் மாநகரம்), பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து ஒரு தொகுதிக்கு 25 தன்னாா்வலா்கள் வீதம் 5 தொகுதிகளுக்கு 125 தன்னாா்வலா்களை கொண்ட இந்த தொடா் ஓட்ட தீப விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தை காலை 9 மணிக்கு வந்தடைந்ததும் ஆட்சியா் இரா.சுகுமாா் வரவேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

அதைத்தொடா்ந்து 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பான உறுதிமொழியை ஆட்சியா் தலைமையில் அனைவரும் ஏற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் நீதிமன்ற துணை ஆட்சியா் லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் க.அருள்செல்வி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சபேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.