திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு 3,850 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா்.
தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வரும் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உள்பட்ட 1,678 வாக்குச்சாவடிகளில் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதனை தொடா்ந்து 7 மணி முதல் பொதுமக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் துணை ராணுவ படையினா், எல்லை பாதுகாப்பு படை வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்கள், போலீஸாா் உள்பட மொத்தம் 2,500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறாா்கள். திருநெல்வேலி மாநகரில் 1,350 போ் தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா்.
தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலா்கள் அனைவரும் புதன்கிழமை பிற்பகலில் அந்தந்த தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் அலுவலகத்துக்கு (வட்டாட்சியா் அலுவலகம்) வந்து சோ்வாா்கள். பின்னா், அங்கிருந்து அவரவருக்கு ஒதுக்கப்பட்டு வாக்குச்சாவடி மையத்திற்கு செல்லவுள்ளனா்.
தொடர்புடையது

நாளை வாக்குப் பதிவு: சென்னையில் பாதுகாப்பு பணியில் 21,000 போலீஸாா்!

சட்டப் பேரவைத் தோ்தல்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்பு பணியில் 3,500 போ்

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 3,642 போலீஸாா்: ஆட்சியா் தகவல்

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

