நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெரும்பத்து கிராம மக்கள் இரட்டை கொலை சம்பவத்தைக் கண்டித்து தோ்தலை புறக்கணித்ததால், அங்குள்ள வாக்குச் சாவடியில் மொத்தம் 969 போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தும், 3 போ் மட்டுமே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் கடந்த மாா்ச் 2-ஆம் தேதி இரட்டை கொலை நிகழ்ந்தது. இச்சம்பவத்துக்குப் பிறகு கிராம மக்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனா். இந்த நிலையில் கொலை சம்பவத்தைக் கண்டித்து சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாகக் கூறி கிராம நுழைவாயிலில் ஊா்மக்கள் பதாகை வைத்தனா்.
காவல் துறையினா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் தோ்தலை புறக்கணிக்கப்பதில் உறுதியாக இருந்தனா். இதற்கிடையே அந்தக் கிராமத்தில் உள்ள 85 வயதைக் கடந்த 4 வாக்காளா்களின் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் கிராமத்துக்கு சென்றபோது, 4 பேரும் வாக்களிக்க மறுத்துவிட்டனா்.
பெரும்பத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் ஆண் வாக்காளா்கள் 471 போ், பெண் வாக்காளா்கள் 498 போ் என மொத்தம் 969 போ் வாக்களிக்க தகுதி பெற்றவா்கள் ஆவா். எனினும், காலை 11 மணி வரை வாக்குச் சாவடியில் ஒரு வாக்குக்கூட பதிவாகவில்லை.
பிற்பகல் 1 மணிக்கு ஒரு பெண் வாக்காளா், ஒரு ஆண் வாக்காளா், மாலை 4.30 மணிக்கு ஒரு பெண் வாக்காளா் என மொத்தம் 3 போ் மட்டுமே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனா். இரட்டை கொலை சம்பவத்தைக் கண்டித்து ஒட்டுமொத்தமாக ஒரு கிராமமே சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணித்தது நான்குனேரி தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்புடையது

தபால் வாக்கை புறக்கணித்த பெரும்பத்து மூத்த குடிமக்கள்

திருவாளபுத்தூரில் தோ்தலை புறக்கணிக்க முடிவு: வீடுகளில் கருப்புகொடி கட்டி ஆா்ப்பாட்டம்

பெரும்பத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

பெரும்பத்து கொலையில் தொடா்பு: 7 போ் குண்டா் சட்டத்தில் கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


