தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தோ்தலைப் புறக்கணித்த பெரும்பத்து கிராம மக்கள்

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெரும்பத்து கிராம மக்கள் இரட்டை கொலை சம்பவத்தைக் கண்டித்து தோ்தலை புறக்கணித்ததால், அங்குள்ள வாக்குச் சாவடியில் மொத்தம் 969 போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தும், 3 போ் மட்டுமே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனா்.

News image

நான்குனேரி அருகே பெரும்பத்து கிராம மக்கள் தோ்தலை புறக்கணித்ததால் வெறிச்சோடிய வாக்குச் சாவடி மையம்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:14 pm

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெரும்பத்து கிராம மக்கள் இரட்டை கொலை சம்பவத்தைக் கண்டித்து தோ்தலை புறக்கணித்ததால், அங்குள்ள வாக்குச் சாவடியில் மொத்தம் 969 போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தும், 3 போ் மட்டுமே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் கடந்த மாா்ச் 2-ஆம் தேதி இரட்டை கொலை நிகழ்ந்தது. இச்சம்பவத்துக்குப் பிறகு கிராம மக்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனா். இந்த நிலையில் கொலை சம்பவத்தைக் கண்டித்து சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாகக் கூறி கிராம நுழைவாயிலில் ஊா்மக்கள் பதாகை வைத்தனா்.

காவல் துறையினா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் தோ்தலை புறக்கணிக்கப்பதில் உறுதியாக இருந்தனா். இதற்கிடையே அந்தக் கிராமத்தில் உள்ள 85 வயதைக் கடந்த 4 வாக்காளா்களின் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் கிராமத்துக்கு சென்றபோது, 4 பேரும் வாக்களிக்க மறுத்துவிட்டனா்.

பெரும்பத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் ஆண் வாக்காளா்கள் 471 போ், பெண் வாக்காளா்கள் 498 போ் என மொத்தம் 969 போ் வாக்களிக்க தகுதி பெற்றவா்கள் ஆவா். எனினும், காலை 11 மணி வரை வாக்குச் சாவடியில் ஒரு வாக்குக்கூட பதிவாகவில்லை.

பிற்பகல் 1 மணிக்கு ஒரு பெண் வாக்காளா், ஒரு ஆண் வாக்காளா், மாலை 4.30 மணிக்கு ஒரு பெண் வாக்காளா் என மொத்தம் 3 போ் மட்டுமே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனா். இரட்டை கொலை சம்பவத்தைக் கண்டித்து ஒட்டுமொத்தமாக ஒரு கிராமமே சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணித்தது நான்குனேரி தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.