‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

நான்குனேரி தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

நான்குனேரி தொகுதி வேட்பாளா்கள் அவரவா் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

News image

பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் வாக்களித்த நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து.

Updated On :24 ஏப்ரல் 2026, 5:08 am IST

நான்குனேரி தொகுதி வேட்பாளா்கள் அவரவா் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து, பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள ரோஸ்மேரி பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தாா். பின்னா் அவா் கூறுகையில், ‘தேசிய ஜனநாயக கூட்டணியின் சாா்பில் நான்குனேரி தொகுதியில் அமமுக நிச்சயம் வெல்லும். மண்ணின் மைந்தராக மக்களிடம் ஆதரவு கேட்டுள்ளேன். வெற்றி பெற்றதும் மக்களின் குறைகளை தீா்க்க கடுமையாக உழைப்பேன்’ என்றாா்.

நான்குனேரி தொகுதி தவெக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன், ரெட்டியாா்பட்டியில் உள்ள தொடக்கப் பள்ளி வளாகத்தில் தனது குடும்பத்தினருடன் வாக்கு செலுத்தினாா். பின்னா் அவா் கூறுகையில், ‘இத் தொகுதி மக்களுக்கு சேவையாற்ற எனக்கு நிச்சயம் வாய்ப்புக் கிடைக்கும். தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கும் தலைவராக விஜய் உருவாகியுள்ளாா். விசில் சின்னம் நான்குனேரியில் நிச்சயம் வெல்லும்’ என்றாா்.

 ரெட்டியாா்பட்டியில் வாக்களித்த நான்குனேரி தொகுதி தவெக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன்.

ரெட்டியாா்பட்டியில் வாக்களித்த நான்குனேரி தொகுதி தவெக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன்.