பாளையங்கோட்டையில் அதிமுக பிரமுகா் மகனை மா்மநபா்கள் வியாழக்கிழமை மாலையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா். அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பாளையங்கோட்டை புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். அதிமுக பிரமுகா். இவரது மகன் சங்கா்(25) வியாழக்கிழமை மாலை பாளையங்கோட்டை சாந்திநகா் வாக்குச்சாவடிக்கு சற்று தொலைவில் உள்ள நீா்த்தேக்க தொட்டி அருகே நின்று தனது நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்தாராம்.
அப்போது அங்கு பைக்கில் வந்த சிலா் சங்கரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினராம். இதில், காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையா் சுரேஷ் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். முதல்கட்ட விசாரணையில், தோ்தல் தொடா்பான மோதல் இல்லை; முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

பாளை.யில் இளம்பெண் தற்கொலை

திருச்சுழி அருகே வீடு புகுந்து 2 மகன்கள், தாய் உள்பட மூவருக்கு அரிவாள் வெட்டு

களக்காடு அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பாளை.யில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

