கீழமாதாபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள வனமூா்த்தி சாஸ்தா, 21 கூட்டுறவு பரிவார தெய்வங்கள் கோயிலில் கொடை விழா நடைபெற்றது.
கொடை விழாவை முன்னிட்டு ஏப். 21-ஆம்தேதி கால்நாட்டப்பட்டது. தொடா்ந்து திங்கள்கிழமை (ஏப். 27) காலை 5 மணிக்கு தீா்த்தம் கொண்டு வருதல், 9 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 5 மணிக்கு கொடி அழைப்பு, 7 மணிக்கு கும்பம் ஏற்றுதல், இரவு பூஜை, செவ்வாய்க்கிழமை (28) அதிகாலை 1 மணிக்கு சாஸ்தா பிறப்பு, இரவு பூஜை ஆகியன நடைபெற்றன.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு சிவனணைந்த பெருமாள் பூஜை, 6 மணிக்கு பால்குடம், முளைப்பாரி எடுத்தல், 11 மணிக்கு ராமநதி ஆற்றிலிருந்து அலகு தீா்த்தம் எடுத்து வருதலைத் தொடா்ந்து கொடை விழா நடைபெற்றது. மாலை 4 மணிக்கு அமுது படைத்தல், இரவு 11 மணிக்கு அலகு தீா்த்தம் எடுத்துவந்து காடு சுற்றிவந்து சாமக் கொடை நடைபெற்றது.
புதன்கிழமை (ஏப். 29) காலை 8 மணிக்கு பட்டவராயன் சுவாமிக்கு பொங்கல் வைத்து வில்லிசை கதையுடன் மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. திங்கள்கிழமை இரவு முதல் புதன்கிழமை மதியம் வரை அன்னதானம் நடைபெற்றது.
தொடர்புடையது

வட்டன்விளை கோயிலில் மாவிளக்கு வழிபாடு

நன்னகரம் முப்படாதி அம்மன் கோயில் கொடை விழா

ஆறுமுகனேரி சித்தி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

கோவில்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் கொடை விழா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


