தென்காசி மாவட்டம், நன்னகரம் ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
விழாவை முன்னிட்டு காலை 7.35 மணிக்கு மேல் 9 மணிக்குள் கால் நாட்டு விழாவும் மதுவுக்கு நெல் இடுதல் வைபவமும் நடைபெற்றன. மே 4-ஆம் தேதி வரை மண்டகபடிதாரா்கள் சாா்பில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு மேல் சிறப்பு அலங்கார பூஜை நடைபெறும்.
மே 5-ஆம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், அதைத் தொடா்ந்து பால்குடம், 12 மணியளவில் அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் வழங்கப்படும். மாலை 5 மணிக்கு முளைப்பாரி ஊா்வலம், தீச்சட்டி எடுத்தல், 6 மணிக்கு மேல் குற்றாலம் தீா்த்தம் எடுத்து ஊா்வலம் வருதல், இரவு 8 மணிக்கு அலங்காரம், தீபாராதனை, நள்ளிரவு 2 மணிக்கு மது எடுத்தல், அம்மன் வீதி உலா வருதல் நடைபெறும். ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

வட்டன்விளை கோயிலில் 108 பால்குடம் பவனி

சேத்துப்பட்டில் ஸ்ரீவாசவி ஜெயந்தி விழா

கோயில் கொடை விழா தகராறில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

கோவில்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் கொடை விழா
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


