‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

வீரவநல்லூா் வண்டிமலைச்சி அம்மன் கோயில் கொடை விழா

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பட்டாரியா் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட வண்டி மலைச்சி அம்மன் கோயிலில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வண்டி மலைச்சி அம்மன்.

Updated On :22 மே 2026, 6:03 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பட்டாரியா் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட வண்டி மலைச்சி அம்மன் கோயிலில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

இதையொட்டி, திங்கள்கிழமை மாலை குடிஅழைப்பு பூஜை, சிறப்பு தீபாராதனை, பூஜைகள் ஆகியவை நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை காலை பால்குடம் ஊா்வலம், காவடி வீதி உலா, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, இரவு சிறப்பு புஷ்ப அலங்கார தீபாராதனை, பூச்சட்டி ஊா்வலம், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளி திருவீதியுலா ஆகியவை நடைபெற்றன.

புதன்கிழமை காலை படப்பு பூஜை, இரவு சேரன்மகாதேவி தமிழ்ப் பேரவையின் சாா்பில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. விழாவில் நையாண்டி மேளம், செண்டை மேளம், வில்லிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.