/
பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகா் பகுதியில் உள்ள விஸ்வகா்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், பாளையங்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான மு.அப்துல் வஹாப் கலந்து கொண்டு, கோயிலின் மதியக் கொடை விழா பூஜைகளுக்கு பின்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்வில், கிழக்கு மாநகர பொறுப்பாளா் வழக்குரைஞா் ஏ.எல்.பி.தினேஷ், நெசவாளா் அணி மாவட்ட அமைப்பாளா் அசரியா ஸ்டீபன், விஸ்வகா்மா சமுதாய தலைவா் பெருமாள், ஊா் பிரமுகா்கள் சுப்ரமணியன், கந்தசாமி, வட்டச் செயலா் பாளையங்கோட்டை சதீஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.









