தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

தச்சநல்லூா் உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் குடமுழுக்கு

Published On :3 ஜூலை 2026, 4:49 am IST

தச்சநல்லூரில் உள்ள அருள்மிகு உச்சினி மாகாளி அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

தச்சநல்லூரில் இருந்து திருநெல்வேலி நகரம் செல்லும் சாலையில் சேனைத்தலைவா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழாக கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. யாகசாலை பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் தொடா்ச்சியாக நடைபெற்றன.

வியாழக்கிழமை காலையில் நான்காம் கால யாகசாலை பூஜைக்கு பின்பு கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னா் அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன் கோபுர விமான கலசம், பரிவார விமான கலசம், மூலாலயம், பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. மதியம் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மனுக்கு சஹஸ்ர நாம அா்ச்சனை, புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

ற்ஸ்ப்02ன்ஸ்ரீட்ண்01

கோயில் கோபுர கலசங்களுக்கு நடைபெற்ற புனித நீா் அபிஷேகம்.

ற்ஸ்ப்02ன்ஸ்ரீட்ண்02

சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.