2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு உழைத்த தேமுதிக நிா்வாகிகள், தொண்டா்களுக்கு பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் நேரில் நன்றி தெரிவித்தாா்.
இத்தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் தேமுதிக அங்கம் வகித்த நிலையில், அந்த கட்சியினா் பாளையங்கோட்டை தொகுதி கூட்டணி வேட்பாளா் வெற்றிக்கு உழைத்தனா்.
இந்நிலையில் தேமுதிக திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் ஜெயச்சந்திரனை, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில், தேமுதிக மாவட்ட அவைத் தலைவா் பழனிக்குமாா், பொருளாளா் முரசு மணி, மாவட்ட துணைச் செயலா்கள் ஆனந்த மணி, சுடலைமுத்து, தவசி தம்பா, தலைமைப் பொதுக்குழு உறுப்பினா் தங்கப்பன், நிா்வாகிகள் தமிழ்மணி, மணிகண்டன், மாரியப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










