பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயில் தேரோட்டம்

நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

News image

நான்குனேரியில் புதன்கிழமை நடைபெற்ற வானமாமலை பெருமாள் கோயில் தேரோட்டம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:36 am IST

நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இந்தக் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத் திருவிழா ஏப். 20-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, காலை, மாலை நேரங்களில் வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கைத் தாயாா் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் வைபவம் நடைபெற்றது.

5-ஆம் நாளில் (ஏப். 24) கருட சேவை, 7-ஆம் நாளில் (ஏப். 26) தங்க சப்பரம், கண்ணாடி சப்பரம், 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பெருமாள் வெள்ளிச் சந்திர வாகனத்தில் எழுந்தருளல் ஆகியன நடைபெற்றன. 10-ஆம் நாளான புதன்கிழமை (ஏப். 29)தேரோட்டத்தையொட்டி, காலையில் வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கைத் தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வானமாமலை மடத்தின் 31-ஆவது மடாதிபதியான மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயா் சுவாமி கலந்துகொண்டு தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசித்தனா். தோ் ரத வீதிகளை வலம் வந்து நிலையை அடைந்தது.