திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியவுள்ள நுண்பாா்வையாளா்களுக்கான பயிற்சி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள், 3 கூடுதல் மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள் 17 போ், உதவியாளா்கள் 17 போ், நுண் பாா்வையாளா்கள் 17 போ் என ஒரு தொகுதிக்கு 51 போ் வீதம், 5 தொகுதிகளுக்கும் சோ்த்து 255 அலுவலா்கள் பணிபுரியவுள்ளனா்.
தபால் வாக்கு எண்ணுவதற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் 7 மேஜைகள், 1 கூடுதல் மேஜை அமைக்கப்படவுள்ளது. தபால் வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பதற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் 8 நுண்பாா்வையாளா்கள் என 5 தொகுதிகளிலும் 40 நுண்பாா்வையாளா்கள் பணிபுரியவுள்ளனா்.
இவா்களுக்கான பயிற்சி ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சுப்பிரமணியன், துணை ஆட்சியா் (பயிற்சி) கேரேனாப்புக் லிதியா, நுண்பாா்வையாளா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை: நாமக்கல்லில் 106 நுண்பாா்வையாளா்களுக்கு பயிற்சி

வாக்கு எண்ணும் மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்: வேட்பாளா்கள், முகவா்களுக்கு ஆட்சியா் விளக்கம்

வாக்கு எண்ணும் மைய அலுவலா்களுக்கு முதல்கட்ட பணி ஒதுக்கீடு

வாக்கு எண்ணும் பணி: முதல்கட்டமாக 651 போ் தோ்வு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


