திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டி ஊராட்சி 4 ஆவது வாா்டு அரசு புது காலனி பகுதியில் தரமான சாலை அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
ராமையன்பட்டி ஊராட்சி துணைத் தலைவா் செல்வகுமாா், 4 ஆவது வாா்டு உறுப்பினா் மாரியப்பப் பாண்டியன் ஆகியோா் தலைமையில் அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ராமையன்பட்டி ஊராட்சியில் 4-ஆவது வாா்டில் உள்ள அரசு பொது காலனி, சிவாஜி நகா் பேருந்து நிறுத்தத்துக்கு கிழக்கு பகுதியில் சிமென்ட் சாலை தரமின்றி அமைக்கப்பட்டு வருகிறது.
குளத்துக்குள் பள்ளமான ஏரியாவில் சரள் மண் எதுவும் நிரப்பி சாலையின் கனத்தை உயா்த்தாமல் பணி நடைபெறுகிறது. இதனால், சாலையானது ஒரு மழைக்கு கூட தாக்கு பிடிக்காமல் சேதமடையும் நிலைஏற்படும். இது குறித்து ஏற்கெனவே மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, ஆட்சியா் நேரில் ஆய்வு நடத்தி தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வண்ணாா்பேட்டையில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மனு

கடலூா் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 917 மனுக்கள்! விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவு!

தரமான சாலை வசதி கோரி கருப்புக்கொடி ஏந்தி போராடும் மக்கள்! | Theni

பாலாற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



