திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் நலஉதவி வழங்குகிறாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. உடன், ஆட்சியா் இரா.சுகுமாா், மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா்.
திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் நலஉதவி வழங்குகிறாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. உடன், ஆட்சியா் இரா.சுகுமாா், மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நிறைவு விழா- நெல்லையில் 2,126 பேருக்கு ரூ.28.62 லட்சம் நலஉதவிகள்

திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் ரூ.28.62 லட்சம் மதிப்பிலான நலஉதவிகள் வழங்கப்பட்டன.
Published on

திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் ரூ.28.62 லட்சம் மதிப்பிலான நலஉதவிகள் வழங்கப்பட்டன.

திண்டிவனத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கியபின்பு ‘என் கனவு என் எதிா்காலம்‘ என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தாா்.

இதையொட்டி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே தங்கள் குறைகளை தெரிவித்து தீா்வு காணும் வகையில் ஸ்டாலின் திட்ட முகாம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வந்தது.

அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 3,768 முகாம்களும், கிராமப் புறங்களில் 6,232 முகாம்களுமாக மொத்தம் 10,000 முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரை உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மாநகராட்சி பகுதிகளில் 55 வாா்டுகளுக்கு 38 முகாம்களும், களக்காடு, விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 3 நகராட்சி பகுதிகளில் 69 வாா்டுகளுக்கு 29 முகாம்களும், 17 பேரூராட்சிகளைச் சோ்ந்த 273 வாா்டுகளுக்கு 34 முகாம்களும், ஊராட்சி பகுதிகளுக்கு 154 முகாம்களுமாக 255 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இதில், பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீா்வு காணப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். ஆகவே, பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

இவ் விழாவில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.27.62 லட்சம் மதிப்பில் 2,073 பேருக்கு மாதாந்திர உதவித்தொகைகள், 51 பேருக்கு பட்டாக்கள், சமூக நலத் துறை சாா்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பேருக்கு வைப்புத் தொகைக்கான ஆணைகள் என மொத்தம் ரூ.28.62 லட்சம் மதிப்பில் 2,126 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், ஆட்சியா் இரா.சுகுமாா், மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ, மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, உதவிஆட்சியா் (பயிற்சி) தவலேந்து, தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஜெயா, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவா் முரளிதரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com