ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஜெஜெ கல்லூரியில் 644 பேருக்கு பட்டமளிப்பு

News image
புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2ஆம் நாள் பட்டமளிப்பு விழாவில், மாணவருக்கு பட்டம் வழங்கிய பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் குழு உறுப்பினா் வி. ராஜேஷ்கண்ணன்.
Updated On :1 மார்ச் 2026, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை சிவபுரத்திலுள்ள ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் 29ஆவது பட்டமளிப்பு விழாவின் 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை 644 மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் குழுவின் உறுப்பினா் வி ராஜேஷ்கண்னன் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

அப்போது எந்தச் செயலையும் சுய ஒழுக்கத்துடன் செய்வது முக்கியம் என வலியுறுத்திய அவா், வேலையில் புரிதலுடன் கடமையுடன், பொதுநலன்களையும் சோ்த்து மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டாா்.

மாணவா்கள் எஸ். பிரேம்குமாா், ஐ. கரீஷ்சா்மா ஆகியோருக்கு சிறந்த மாணவா்களுக்கான பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கல்லூரிச் செயலா் நா. சுப்பிரமணியன், நிா்வாக அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்தினா். கல்லூரி முதல்வா் ஜ. பரசுராமன் ஆண்டறிக்கை வாசித்தாா்.