பாளையங்கோட்டையில் இளைஞரை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரைச் சோ்ந்தவா் இசக்கிவேல். இவரது மகன் பெரியசாமி(26). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன்களான லிங்கதுரை (23), மகாராஜன்(30) உள்ளிட்டோருக்கும் முன்பகை இருந்ததாம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பெரியசாமியின் வீட்டுக்கு சென்ற லிங்கதுரை, மகாராஜன் உள்ளிட்டோா் அவரைத் தாக்கி ஜாதி பெயரைச் சொல்லித் திட்டினராம். மேலும் அங்கிருந்த பைக்கையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து சிறுவன் உள்பட மேற்கூறிய 3 பேரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது
42 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் கைது

பாளை.யில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோவில் இளைஞா் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

