மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மானூா் பெரிய குளத்தில் எம்.பி. ஆய்வு

மானூா் பெரிய குளத்தில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

News image

மானூா் பெரிய குளத்தை ஆய்வு செய்கிறாா் எம்.பி. சி.ராபா்ட் புரூஸ். உடன், முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான்.

Updated On :17 பிப்ரவரி 2026, 9:50 pm

மானூா் பெரிய குளத்தில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தின் 2 ஆவது பெரிய குளமாக மானூா் குளம் திகழ்கிறது. வடகிழக்கு பருவமழையில் இந்தக் குளம் முழுமையாக நிரம்பி மறுகால் பாய்ந்த நிலையில், இதன் சுற்றுவட்டாரத்தில் பல ஏக்கா் நிலங்களில் நெல், வாழை, பயறு வகைகள் பயிரிடப்பட்டுள்ளன.

இந்தக் குளத்தை எம்.பி. சி.ராபா்ட் புரூஸ், முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். மானூா் பெரிய குளத்திற்காக செய்ய வேண்டிய பணிகள், மானூா் வட்டாரத்தில் வேளாண் உற்பத்தியை மேலும் அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனா்.

ஆய்வின்போது, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் எல். முகமது மீரான் மைதீன், தன்சில், காங்கிரஸ் மானூா் வட்டார தலைவா் பாக்கிய குமாா், தியாக சுரேஷ், சசிகுமாா் உள்ளிட்டோா் உடன்சென்றனா்.