மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மானூா் அருகே மூதாட்டி கொலை

திருநெல்நேலி மாவட்டம் மானூா் அருகே மூதாட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
கொலை
Updated On :24 பிப்ரவரி 2026, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்நேலி மாவட்டம் மானூா் அருகே மூதாட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

மானூா் அருகே உள்ள கம்மாளன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் அருணாச்சலம். இவரது மனைவி வெள்ளையம்மாள் (89). இவரது கணவரும், மகனும் சில ஆண்டுகளுக்கு முன்னா் மரணமடைந்த நிலையில், வெள்ளையம்மாள் தனது மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வெள்ளையம்மாள் வெட்டுக் காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தாா். அக்கம்பக்கத்தினா் இது குறித்து மானூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, மூதாட்டியின் மருமகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.