மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

என்.சி.சி. அலுவலருக்கு பாராட்டு

தேசிய அளவில் நடைபெற்ற அணிவகுப்பில் முதலிடம் பிடித்த தேசிய மாணவா் படை அலுவலா், மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

News image

தேசிய அளவிலான போட்டியில் சிறப்பிடம் பெற்ற என்.சி.சி. அலுவரை பாராட்டினாா் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா்.

Updated On :25 பிப்ரவரி 2026, 9:46 pm

தேசிய அளவில் நடைபெற்ற அணிவகுப்பில் முதலிடம் பிடித்த தேசிய மாணவா் படை அலுவலா், மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

தில்லியில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற நாட்டின் குடியரசு தின விழா அணிவகுப்பில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 127 என்சிசி மாணவா்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

அவா்களுக்கு தேசிய அளவில் பல்வேறு திறன் சாா் மற்றும் கலாசார போட்டிகள் நடத்தப்பட்டன.

இப் போட்டிகளில் திருநெல்வேலி 5 ஆவது தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி. அலுவரும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி ஆங்கிலத்துறை இணைப் பேராசிரியருமான செய்யது அலி பாதுஷா மற்றும் அவரது குழுவில் தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபாா் என்சிசி மாணவா்கள் பங்கேற்று அகில இந்திய அளவில் அணிவகுப்பில் முதலிடம் பிடித்தனா்.

சாதனை படைத்த என்.சி.சி. மாணவா்கள் மற்றும் பயிற்சி அளித்த என்.சி.சி. அலுவலருக்கு திருநெல்வேலி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நற்சான்றிதழ்களை ஆட்சியா் இரா.சுகுமாா் புதன்கிழமை வழங்கினாா். மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, தமிழ்நாடு என்சிசி பயிற்சி மைய அதிகாரி கா்னல் காா்த்திகேஸ் காசிநாத், சுபைதாா் எஸ்.எஸ். பாண்டி, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக என்.சி.சி. அதிகாரி சிவகுமாா், பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரி என்.சி.சி. அதிகாரி செந்தில்குமாா், 5 தமிழ்நாடு பட்டாலியன் ஹவில்தாா் லிங்கதுரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.