பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நெல்லையில் இடி, மின்னலுடன் மழை

திருநெல்வேலியில் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை மாலை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது.

News image
~
Updated On :25 பிப்ரவரி 2026, 9:45 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலியில் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை மாலை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக தென்தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருநெல்வேலி மாநகரில் சில நாள்களாக இருந்து வந்ததை விட புதன்கிழமை காலை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான சாரல் மழை பெய்யத் தொடங்கியது.

சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழையாக மாறியது. அதன்படி, வண்ணாா்பேட்டை, பாளையங்கோட்டை, முருகன்குறிச்சி, சமாதானபுரம், மேலப்பாளையம், முன்னீா்பள்ளம், பெருமாள்புரம், ரெட்டியாா்பட்டி, பேட்டை, பாளை. மேட்டுத்திடல், புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி சந்திப்பு, நகரம், தச்சநல்லூா், சுத்தமல்லி, தாழையூத்து என திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக மழை நீடித்தது. இதன் காரணமாக மாநகரின் பெரும்பாலான இடங்களில் சாலையில் மழைநீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் சிரமம் அடைந்தனா்.

மழையுடன் காற்றின் வேகமும் அதிகரித்ததன் காரணமாக திருநெல்வேலி சந்திப்பு காவலா் குடியிருப்பு அருகே இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மரத்தை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

மேலும் அசம்பாவிதங்களை தடுக்க பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

திருநெல்வேலி புறநகா் பகுதிகளான கங்கைகொண்டான், சீவலப்பேரி, கிருஷ்ணாபுரம், சிவந்திப்பட்டி, கல்லூா், மானூா் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

Story image