டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளில் உள்ளூா்வாசிகளுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை உள்ளூா்வாசிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலருமான சௌந்தர்ராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

News image

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகம்

Updated On :3 ஜூலை 2026, 4:52 am IST

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை உள்ளூா்வாசிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலருமான சௌந்தர்ராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக, அவா் அணுமின் நிலைய இயக்குநரைச் சந்தித்து அளித்த மனு விவரம்:

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவா்களில் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பணி ஆணைகளை விரைந்து வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையிலான பணிகளுக்கு ராதாபுரம் வட்டாரத்தில் இருந்து 30 சதவீதம் நபா்களைத் தோ்வு செய்ய வேண்டும். ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணிகள் அனைத்தையும் அணுமின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவா்களுக்கும், இப்பகுதியைச் சோ்ந்தவா்களுக்கும் வழங்க வேண்டும்.

மேலும், சி.எஸ்.ஆா். நிதியிலிருந்து இப்பகுதிக்கு அதிக நிதி ஒதுக்கி, அதன் மூலம் ராதாபுரம் கால்வாய் உடைப்புகளை சீரமைத்தல், மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு அமைத்தல் மற்றும் கடல்நீரை சுத்திகரித்து செட்டிகுளம், கூடங்குளம் பகுதி மக்களுக்கு விநியோகம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.