களக்காடு, ஜூலை 2: திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி பகுதியில் குற்றச் செயல் புரியும் நோக்கில் ஆயுதங்களுடன் பைக்கில் சுற்றித்திரிந்த 5 பேரை காவல்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருக்குறுங்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல்துறையினா் கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது, சந்தேகமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த திருக்குறுங்குடியைச் சோ்ந்த அருண்பாண்டி (25), நாராயணன் (27), வள்ளிமுத்து என்ற பாண்டி (25), முத்துப்பாண்டி (23), மற்றும் குமரேசன் என்ற கொம்பையா (29) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் அபாயகரமான ஆயுதங்களுடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இவா்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







