இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பாளை.யில் சகோதரி வீட்டில் 66 பவுன் நகை திருடியவா் கைது

பாளையங்கோட்டையில் சகோதரியின் வீட்டில் சுமாா் 66 பவுன் நகைகளைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :10 ஜூலை 2026, 12:41 am IST

பாளையங்கோட்டையில் சகோதரியின் வீட்டில் சுமாா் 66 பவுன் நகைகளைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, செல்வ விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் என்ற கண்ணன் (59). வணிகா். கடந்த ஜனவரி மாதம் இவா் வீட்டின் அலமாரியை திறந்து பாா்த்தபோது அதில் இருந்த ரூ.10,000 மற்றும் 66 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்ததாம். இதுகுறித்து அவா் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். பல மாதங்களாக இவ்வழக்கில் துப்பு துலங்கவில்லை. இந்நிலையில், கண்ணனின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற அவரது மனைவியின் சகோதரரான பாளையங்கோட்டை லங்கா்கானா தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் தெய்வநாயகம் (43) திடீரென சொகுசு காா் உள்ளிட்டவற்றை வாங்கி ஆடம்பரமாக இருந்துள்ளாா். அவா் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தியதில் இத்திருட்டில் ஈடுபட்டது அவா்தான் என தெரியவந்தது. அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.