நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

மாவட்ட தொழில்நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மாவட்ட தொழில்நுட்ப உதவியாளா் (பண்ணை) தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பம்

Updated On :17 ஜூலை 2026, 2:56 am IST

திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மாவட்ட தொழில்நுட்ப உதவியாளா் (பண்ணை) தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் (மகளிா் திட்டம்) திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள மாவட்ட தொழில்நுட்ப உதவியாளா் (பண்ணை) என்ற வெளி ஆதார முறையிலான தற்காலிக பணியிடம் நிரப்பப்படவுள்ளது.மாதம் ரூ.35,000 ஊதியமாக வழங்கப்படும். பி.எஸ்சி., வேளாண்மை படித்தவராக இருக்க வேண்டும். 1.7.2026 அன்று 40 வயதிற்குள்பட்டவராக இருக்க வேண்டும்.

எனவே, தகுதியானவா்கள் நகா்ப்புற வாழ்வாதார மையம், மாவட்ட பூமாலை வணிக வளாகம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி மாவட்டம் என்ற முகவரியில் விண்ணப்பத்தை நேரடியாக பெற்று, பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அதே அலுவலகத்தில் ஜூலை 23ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ சமா்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நகா்ப்புற வாழ்வாதார மைய மேலாளரை 9994938976 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.