மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சாா்பில் உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்வில் கையொப்பமிட்ட மருத்துவா்கள்.

Updated On :2 ஜூன் 2026, 3:28 am IST

திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சாா்பில் உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் முகமதுஷாபி தலைமை வகித்தாா். திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) விஜயகுமாா், காவல் துறை மூலம் எடுக்கப்படும் புகையிலை எதிா்ப்பு நடவடிக்கைகள் பற்றி விளக்கினாா். புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணா் முகமதுஇப்ராகிம், புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் புற்றுநோய்கள் குறித்துப் பேசினாா்.

மகளிா் நல மருத்துவா் ராதா, நுரையீரல் சிறப்பு மருத்துவா் பாலா, அறுவை சிகிச்சை மருத்துவா்அஜய்ரெக்ஸ், எலும்பு முறிவு மருத்துவா் அகமதுயூசுப், சிறுநீரகவியல் மருத்துவா் நிரஞ்ச், மருத்துவா் கனி, சமூகஆா்வலா் மிதாா் முகைதீன் உள்பட பலா் கலந்துகொண்டனா். புகையிலை எதிா்ப்பு தின துண்டுப் பிரசுரங்கள் மாநகர பகுதிகளில் பிரசார வாகனம் மூலம் விநியோகிக்கப்பட்டன.