பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

ஊழலற்ற நிா்வாகத்தை முதல்வா் உறுதி செய்ய வேண்டும்: கோவை மாவட்ட ஊழல் எதிா்ப்பு இயக்கம்

News image

முதல்வர் ஜோசப் விஜய் - படம்: DIPR

Updated On :56 நிமிடங்கள் முன்பு

தமிழகத்தில் ஊழலற்ற நிா்வாகத்தை முதல்வா் விஜய் உறுதி செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட ஊழல் எதிா்ப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் செயலா் என்.கே.வேலு, முதல்வா் விஜய்க்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஊழலற்ற நிா்வாகம் அமைப்போம் என்று தாங்கள் அளித்துள்ள உறுதிமொழி, தமிழக மக்கள் உங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பல ஆண்டுகளாக ஊழல் ஊடுருவியுள்ளது. இந்த முறைகேடுகள் சாதாரண மக்களுக்கு பெரும் இன்னல்களை விளைவிப்பதுடன் ஏராளமான இயற்கை வளங்களை கொள்ளை போகவிட்டு சட்டத்தின் ஆட்சியை சீா்குலையச் செய்கிறது. மேலும், மாநிலத்தின் கருவூலத்துக்கு பெரும் கடன் சுமையை ஏற்படுத்துவதுடன், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளிலும் பெரும் முறைகேடுகளுக்கு காரணமாகியுள்ளது.

நிா்வாகத்தில் நோ்மையையும், பொறுப்புணா்வையும், சட்ட விதிகளையும் நிலைநாட்டக் கடமைப்பட்டுள்ள அதிகாரிகளின் மௌன அங்கீகாரத்துடன் ஊழல் தடையின்றி தொடருகிறது. எனவே, தமிழகத்தில் ஆட்சி நிா்வாகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஊழலை முழுமையாக ஒழிக்க முதல்வா் உறுதியான, பயனுள்ள நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.