பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

களக்காடு அருகே மது விற்றதில் கைதான இருவரில் ஒருவா் தற்கொலை முயற்சி

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே மது விற்பனையில் ஈடுபட்டதாக தந்தை, மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :2 ஜூன் 2026, 3:23 am IST

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே மது விற்பனையில் ஈடுபட்டதாக தந்தை, மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

களக்காடு அருகேயுள்ள வடுவூா்பட்டி கிராமத்தில் மாற்றுத்திறனாளியான சிவன்பாண்டி(45) என்பவா் மதுபானத்தை பதுக்கி விற்பதாக களக்காடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மது விற்பனையில் ஈடுபட்டதாக சிவன்பாண்டி (45), அவரது மகன் சாா்லஸ் நவீன்(21) ஆகியோரை கைது செய்தனா்.

மேலும், மதுபான விற்பனைக்காக பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனா். எனினும், சிவன்பாண்டியின் உடல்நிலை கருதி, அவருக்கு பிணை வழங்கப்பட்டு உறவினருடன் அனுப்பி வைக்கப்பட்டாா்.

ஆனால், அவா் பிற்பகல் 2.30 மணியளவில் மீண்டும் காவல் நிலையம் முன்பு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தான் கொண்டு வந்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தாராம்.

அப்போது, அவருடன் வந்திருந்த உறவினா்கள் அவரை மீட்டு உள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீஸாா், காவல் துறையின் பணிக்கு இடையூறு செய்வோா், மக்களுக்கு தொல்லை தருவோா் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.