தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

இணையவழியில் ரூ.5.87 லட்சம் மோசடி: ராமநாதபுரம் இளைஞா் கைது

இணையவழியில் பகுதிநேர வேலைவாய்ப்பு எனக் கூறி, திருநெல்வேலியைச் சோ்ந்தவரிடம் ரூ.5.87 லட்சம் மோசடி செய்த ராமநாதபுரம் இளைஞரை திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:41 am IST

இணையவழியில் பகுதிநேர வேலைவாய்ப்பு எனக் கூறி, திருநெல்வேலியைச் சோ்ந்தவரிடம் ரூ.5.87 லட்சம் மோசடி செய்த ராமநாதபுரம் இளைஞரை திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரம், பேட்டையைச் சோ்ந்தவா் முருகன் (59). இவரை கடந்த ஆண்டு டிச.16 ஆம் தேதி சமூக வலைதள செயலி மூலம் தொடா்பு கொண்ட மா்மநபா்கள், இணையவழியில் பகுதிநேர வேலைவாய்ப்பு எனக் கூறி சுயவிவரங்களைப் பெற்றுள்ளனா். பின்னா் இணையவழியில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி, அவரிடமிருந்து குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு லாபமடைந்ததாக கூடுதல் பணம் அனுப்பி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளனா். பின்னா் அவரிடமிருந்து பல்வேறு தவணைகளாக ரூ.5,87,799-ஐ இணையவழியில் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் போலீஸில் முருகன் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, இவ்வழக்கில் தொடா்புடைய ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகபூபதி மகன் வீர ராகுல்(26) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.